எத்தனை உயிர்களடா.........!
எத்தனை உறவுகளடா.........!
அத்தனையும் - நம்
நாட்டு நலன் கருதி.
ஐயோ என்று அழுகிறது.
தொப்புள்க்கொடி உறவுகள்
அத்தனைக்கும் எப்படி
செய்ய முடியும்...
எம்மால் கைமாறுகள்.
தமிழகமே.................
நீங்கள் விடும் உயிர் மூச்சு
தமிழீழத்தில் கலக்கட்டும்.
தமிழகமே.................
நீங்கள் விடும் கண்ணீர்.
தமிழீழத்தில் மழையாக பெய்யட்டும்.
காற்றும் மழையும் சேர்ந்து..
எமக்கொரு நல்ல வாழ்வை அளிக்கட்டும்.
உங்கள் உறவுகள்...
எங்கள் உறவோடு இணையட்டும்.
அடுத்த யென்மம்
ஒன்றிருந்தால்..........
தமிழகத்து உயிர் நாடிகள்
தமிழீழக்கருவில் சேயாகட்டும்.
உங்கள் அபிசேகா.//
- abisheca's blog
- Login or register to post comments

