பசியும் பட்டினியும்
கொலையும் கொள்ளையும்
கடத்தலும் கப்பம் கேட்டு மிரட்டுவதும்
வான்குண்டுத் தாக்குதலும்
கிளைமோரின் வெடிப்புகளும்
அகதியாய் இடம் பெயர்வுகளும்
அநியாயச் சாவுகளும்
இவையே எம் மண்ணில்
அன்றாட நிகழ்வுகளாய் ஆனபோதும்
விடிந்த பொழுதில் விழித்தெழுந்து
அல்லும் பகலும் அயராதுழைத்து
அம்மாவையும் அக்கா தங்கையையும்
அரணாகக் காத்து நின்ற
சின்னஞ் சிறுவனையும்
விட்டு வைக்கவில்லை
ராணுவத்தின் வேட்டுக்கள்.
ராணுவத்தின் வேட்டுக்கள்
| கவிதை எங்கள் மூச்சு |

