இது தான் இஸ்லாம்???????????

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்:நாள் 15:09:2006 இஸ்லாமிய அழைப்பகம் செனாயியா-ஜித்தா,சவுதி அரேபியா.மௌளவி டாக்டர்.அஹ்மத் அஸ்ரப் (ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர்,மன்னர் காலீத் பல்கலைக்கழகம்,அப்ஹா-சவுதி அரேபியா

http://tamilchristianvideo.magnify.net/item/MPNKTYSKGW5XT2RS6972

ஹதீஸில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் நபியவர்கள் சொன்னதாக சொல்லுகிறார்கள்"யார் ஒருவர் தனது மார்கத்தை மாற்றுகின்றானோ அவனைக் கொல்லுங்கள்"இந்த ஹதீஸின் பிரகாரம் இஸ்லாத்தில் உள்ள ஒருவர் முர்த்தத் ஆனால் அதாவது மதம் மாறினால் அவர் இஸ்லாமிய சட்டப்படி கொல்லப்பட வேண்டிய ஒருவர் ஆவார். இதே ஹதீஸை இதே கருத்துப்பட இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் சொன்னதாக புகாரியிலேயும்,முஸ்லீமிலேயும் பதியப்பட்டு உள்ளது.புகாரியிலே 6878 ஹதீஸ்,முஸ்லீமிலே 4351 ஹதீஸ் களில் இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் நபி அவர்கள் இவ்வாரு சொன்னதாக சொல்லுகிறார்கள்"ஒரு முஸ்லீமினுடைய இரத்தம் ஹலால் ஆக மாட்டாது.அதாவது நான் நபியென்றும்,அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ரு சொல்லுகிற முஸ்லீமின் இரத்தம் ஹலால் ஆகமாட்டாது எப்பொழுது என்றால் மூன்று காரணங்களை தவிர.இந்த மூன்று விஷயங்களை செய்யும் பொழுது அவர் முஸ்லீமாக இருக்கும் பொழுது அவர் கொல்லப்படவேண்டும்.1,திருமணம் செய்த பின் விபச்சாரம் செய்பவர்,2,இன்னொருவரை அநியாயமாக கொன்றவர்,3,இஸ்லாம் மார்கத்தை விட்டும் ,முஸ்லீம்களை விட்டும் விலகி விடுபவர்.இந்த மூவரையும் கொல்லுதல் வேண்டும்.இதன் பிரகாரம் திருமணம் செய்து விபச்சாரம் செய்பவர் இஸ்லாமிய நீதிமன்றத்திலே நிருபிக்கப்படும் பொழுது கொல்லப்படவேண்டும்.இரண்டாவதாக ஒருவரை கொன்றதாக நிருபணமானால் கொலை செய்தவர் கொல்லப்பட வேண்டும்.மூன்றவாதாக ஒருவர் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறேன்,இஸ்லாம் எனக்கு விருபம் இல்லை.நான் யூத மதத்துக்கு செல்கிறேன் அல்லது இந்து மதத்திற்கு செல்லுகிறேன் என்று சொன்னால் அது இஸ்லாமிய நாடாக இருந்தால் அவர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு உலமாக்கள் சொல்லுகிரபடி அவர் மூன்று முறை தவ்பா செய்ய வேண்டும் அல்லது ஒரு மாதம் அவகாசம் இதில் ஏதோ ஒன்று கொடுக்கப்பட்டு உலமாக்கள் அவருடன் கலந்துரையாடி இறுதியிலே அவர் தன்னுடைய கருத்துத்தான் என்று உறுதியாக நான் இஸ்லாத்திலே இருக்கமாட்டேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்தால் இஸ்லாமிய மார்க சட்டப்படி அவர் (முர்த்தத்) கொல்லப்படுகிறார் என்பதே ரஸூல் அவர்கள் சொல்லுவதாக புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களிலே பதியப்பட்டு உள்ளது. மூன்றாவது ஹதீஸ் என்னவென்றால் ரஸூல் அவர்கள் அபு முஸல் அசாரி என்ற நபித் தோழரை ஏமன் நாட்டுக்கு கவர்னராக அனுப்புகிறார்கள்.அதன் பின்பு இரண்டாவதாக முஹாது இப்னு ஜபல்(ரலி)அவர்களையும் அனுப்புகிறார்கள்.முஹாது இப்னு ஜபல் அவர்கள் ஏமனுக்கு வரும் பொழுது அவர்க்கு முன் அங்கு கவர்னராக இருக்கும் அபு முஸல் அசாரி அவர்கள் அவரை வரவேற்று ஒரு தலகணையை கொடுத்து அமரச் சொல்லுகிறார்கள்.அப்பொழுது அபு முஸல் அசாரி அவர்களுடைய வீட்டிலே ஒருவர் கட்டப்பட்டு கிடக்கிறார்.அப்பொழுது நபிகள் நாயகம் அவர்களின் தோழர் முஹாது இப்னு ஜபல் அவர்கள் கேட்கிரார்கள் ஏன் இவர் கட்டப்பட்டுக்கிடக்கிறார்?என்று.அதற்கு பதிலாக"இவர் ஒரு யூதனாக இருந்தார்,பின்பு இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஸ்லீமாக மாறினார்.இப்பொழுது மீண்டும் யூதனாக மாறிவிட்டார் என்று அபு முஸல் அசாரி சொன்னார்கள்.சரி நீங்கள் உட்காருங்கள் என்று அவர் சொன்னபோது அதற்கு முஹாது இப்னு ஜபல் அவர்கள் நான் உட்கார மாட்டேன் முதலாவதாக இந்த மதம் மாறியவர் கொல்லப்படவேண்டும்."இவர் கொல்லப்படும் வரை நான் என் ஸ்தானத்தில் இருந்து இறங்கமாட்டேன்.இதுதான் அல்லாவுடைய,முகமது நபியுடைய தீர்ப்பு என்று முஹாது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இது போன்ற ஆதாரபூர்வமான மூன்று ஹதீஸ்கள் காணப்படுகிறது.அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர் முர்த்தத்தாக கருதப்பட வேண்டும்.முர்த்தத்துக் குறிய தண்டணை என்னவென்றால் அவர் கொலை செய்யப்படவேண்டும் என்பதே.ஆனால் இந்த கொல்லப்பட வேண்டும் என்பது இந்த மூன்று ஹதீஸ்களில் காணப்பட்ட இஸ்லாமை விட்டு வெளியேறுபவர் கொல்லப்படவேண்டும் என்பது இமாம்களில் ஏகோபித்த முடிவு ஆகும்.இப்னு அப்து பர் என்ற அறிஞர் தனது நூலிலே 18வது பாகம் 246வது பக்கத்திலே சொல்லுகிறார்கள் ஒரு ஆண் மதம் மாறினால் அதாவ்து முர்த்தத் ஆனால் அவன் கொல்லப்படவேண்டும் என்பதிலே இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்திலே இருக்கிறார்கள்.ஆனால் ஒரு பெண் இஸ்லாம் மதத்தை விட்டு வேறு மதத்துக்கு போனால் கொல்லப்பட வேண்டுமா இல்லையா என்ற விசயத்தில் தான் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.ஏனென்றால் யுத்தத்திலே ஒரு பெண் கொல்லப்பட்டு கிடந்த பொழுது பெண்களையும்,சிறுவர்களையும் கொல்ல வேண்டாம் என்று ரஸூல் அவர்கள் தடுத்துள்ளார்கள்.இந்த ஹதீஸை வைத்து சில உலமாக்கள் சொல்லுவது ஒரு பெண் மதம் மாறினால் கொல்லப்பட கூடாது.சிறையில் இடப்படவேண்டும்.எது எப்படி இருந்தாலும் மதம் மாறிய ஆண் கொல்லப்பட வேண்டும் என்பதில் இஸ்லாமிய சமுதாயம் ஒருமனமாக உள்ளது।

http://tamilchristianvideo.magnify.net/item/C286S3FHTPLM93TV

இதையே பல இஸ்லாமிய உலமாக்கள் தங்கள் புத்தகங்களிலே எழுதியுள்ளனர்.எனவே இஸ்லாமை விட்டு வெளியேறும் ஆண் கொல்லப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.மதம் மாறும் ஒருவர் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக மூன்று நபித்தோழர்களின் ஹதீஸ்கள் உள்ளன.அத்துடன் நபிகள் காலமுதல் நவீன காலம் வரை எல்லா உலமாக்களும் மதம் மாறுகின்றவர்களை கொல்ல வேண்டும் என்ற ஏகோபித்த கருத்திலேயே இருந்துள்ளனர். ஆனால் ஒரு சில (இந்தியாவில் வாழும்) இஸ்லாமிய சகோதரர்கள் மதம் மாறுகிறவர்களை கொல்லக்கூடாது.இஸ்லாத்திலே கருத்துச்சுதந்திரம் இருக்கிறது.விரும்பினால் அவர்கள் இஸ்லாமில் இருக்கலாம் இல்லை என்றால் இஸ்லாமை விட்டு போகலாம் என்ற கருத்தை வைக்கிறார்கள்.குரானில் உள்ள ஒருசில வசனங்களை காட்டி இந்த வசனங்கள் மதம் மாறியவர்களை கொல்லப்பட வேண்டு என்று சொல்லுகின்ற ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படுவதாக சொல்லுகிறார்கள்.இப்பொழுது அவர்கள் எடுத்துக்காட்டு ஆயத்தை நாம் பார்ப்போம். முதலாக வைக்கும் குரான் வசனம்"மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது."என்ரு சொல்லுகிறார்கள்.இந்த வசனத்துக்கு பதில் சொல்லும் பொழுது இரண்டு விதமாக பதில் சொல்லலாம்.இந்த வசனம் இறங்கிய பிண்ணணி என்னவென்று பார்க்க வேண்டும். பனு நழிர் என்ற யூத குலம் மதினாவில் இருந்தது.அவை இஸ்லாத்துக்கும், முஸ்லீம்களுக்கும் விரோதமாக எழுந்த போது முகமது(ஸ்ல்)அவர்களை நாடு கடத்தினார்கள்.அவ்வாறு கடத்தப்பட்ட போது, அநேக மதினா வாசிகள் தங்கள் குழந்தைகள் அதிக நாள் வாழ்ந்தால் யூதர்களுடன் சேர்த்து விடுவோம் என்று முன்பு நேர்ச்சை வைத்திருந்தார்கள்.அந்த மாதிரி யூதர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த தங்கள் குழந்தைகளை நாடு கடத்தப்படும் யூதர்களிடம் இருந்து தஙகளுக்கு வாங்கி தர வேண்டும் என்று சொன்னார்கள்.இவர்கள் நாங்கள் பெற்ற பிள்ளைகள்,இப்பொழுது இந்த யூதர்களுடன் நாடு கடத்தப்படுகிறார்கள்.அவர்களை திரும்ப பலவந்தமாக பெற்றுத்தாருங்கள் என்று முறையிட்ட போது ரஸூல் அவர்களும் அதற்கு சம்மதித்த போது தான் இந்த வசனம்(ஆயத்து )இறங்கியது."மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது."எனவே அவர்களுடன் போகும் குழந்தைகள் போவதாக இருந்தால் போகட்டும் என்று இறைவன் வசனம் இறக்கினான். இரண்டாவதாக இந்த வசனம் மாற்றப்பட்ட அதாவது சட்டம் மாற்றப்பட்ட வசனத்துக்கு உற்பட்டதாகும்.இதற்கு பின்பு அல்லாஹ் நான்கு வசனங்களை இறக்கி உள்ளான்।

http://tamilchristianvideo.magnify.net/item/XZDG9SXT39V4B6C6

அது என்ன வசனம்1,"நீங்கள் எதிர்காலத்திலே கடுமையாக ஒரு போராடக்கூடிய சமூகத்துடன் போராடுவீர்கள்,அவர்கள் சரணடையும் வரையில். 2,"காபிர்களுடனும்,முனாபிக்குகளுடனும் நீங்கள் போராடுவீர்கள்" இந்த குரான் வசனம் மூலம் இஸ்லாமை பரப்ப நாங்கள் காபிர்களுடன் யுத்தம் செய்யலாம் என்பது தெளிவாகிறது. 3,"உங்கள் அடுத்துள்ள காபிர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்" 4,அல்லாவையும்,மறுமைநாளையும் நம்பாதவர்களையும் அல்லாவும்,ரஸூலும் ஹராம் ஆக்கியதை ஹராம் ஆக்காதவர்களையும்,இந்த சத்திய மார்கத்தை பின்பற்றாதவர்களையும் நீங்கள் போரிடுங்கள்,வேதக்காரர்களுடனும் நீங்கள் போரிடுங்கள்.அவர்கள் வரி கட்டும் வரை போராட வேண்டும்.இது வேதக்காரர்களுக்கு மட்டும் உரியது.அதாவது ஜிஸ்யா வரியை வசூல் செய்வது வேதக்காரர்களாகிய கிறிஸ்தவர்களுக்கும்,யூதர்களுக்கும் மட்டும் செல்லும்.ஆனால் விக்கிரக வணக்கம் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் ஒன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இஸ்லாமிய ஆட்சியின் நடைமுறைப்படி கொலை செய்யப்பட வேண்டும்.இதுவே குரானின் இறுதியான கட்டளை ஆகும். "மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது"என்ற வசனம் பின்பு அருளப்பட்ட நான்கு சட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது. எனவே மதம் மாறுகிறவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது புற மதஸ்தர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கலாம்.ஆனால் புற மதத்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக வேண்டி இஸ்லாமில் சொல்லப்பட்ட இந்த திட்டமும்,தெளிவுமான ஆதாரங்களை நாங்கள் ஒருக் காலமும் மறுக்க முடியாது. எங்களிடம் மூன்று ஹதீஸ்கள் உள்ளது,அதுமட்டும் அல்லாமல் உலமாக்களின் ஏகோபித்த கருத்து உள்ளது,இது மட்டும் அல்லாமல் குரானில் மார்கத்தை பரப்புவதற்கு போராடலாம் என்ற நான்கு வசனங்கள் உள்ளன.இவைகளை எல்லாம் நாங்கள் உதறித்தள்ளி விட்டு ஏதோ இஸ்லாமுக்கு வருவார்களா இல்லையா என்று தெரியாதவர்களை திருப்திப்படுத்த ஒரு காலும் இதை நாங்கள் நிராகரிக்க மாட்டோம். (எனவே இந்தியா போன்ற மத சார்பற்ற நாடுகளில் வாழும் முஸ்லீம்கள்)"மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை"என்ற வார்த்தைகளை ஆதாரமாக எடுத்து சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

English to Tamil converter

Transliterate to Tamil - தமிழில் தட்டச்சு செய்ய

Type your text here See your results here
The vowels:
a aa, A i ee, I u oo, U
e ae, E ai o oa, O au
Ahh, H
The Consonants:
g, k, kh, c க் nG ங் ch ச் j ஜ் nY ஞ்
d, t ட் nN ண் dh, th த் N ந் n ன்
b, bh ப் m ம் y ய் r ர் R ற்
l ல் L ள் zh ழ் v, w வ்
sh ஷ் s ஸ் h ஹ் f ஃப்

Letters like g and k represent the same thamizh letter. So, "akhilaa", "akilaa", "agilaa", "acilaa" all give "அகிலா"

To get the complete syllable, suffix it with an "a". For eg., "pa" is "ப".

For half syllables, stop with the code for that syllable alone. For eg., "zh" is "ழ்". The general rule of thumb is that with two touching syllables, the former syllable is a half syllable. So, "chcha" is "ச்ச". The syllable "ங்" has to be typed out as "ng" and it is usually followed by a "k". As in, "thangkai" "தங்கை".

Some examples

vijay விஜய்
vidhyaa வித்யா
lathaa லதா
latchumiNaaraayanNan லட்சுமிநாராயணன்
akhilaa அகிலா
pirathaap பிரதாப்
bharath பரத்
kirushnNaswAmi கிருஷ்ணஸ்வாமி

Contact: liyer.vijay@gmail.com

The code this site uses is here. It is free for use.