தமிழரின் திருப்புமுனை

Domestic Violence Support Chennai - குடும்ப வன்முறை சென்னை

Who ever subjected to domestic violence in chennai can approach M.Santhi Saraswathi,
சென்னையில் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டால் அணுகுங்கள்.

Protection Officer,
District Social Welfare Office,
8th Floor, Singaravelar Maligai,
Collectorate Campus,
Rajaji Salai, Chennai.600 001.
Ph: 25264568
For clarification call 9962999008

abisheca's blog

இலங்கையில் பாதி தமிழீழம்.

தோல்விகள் வரும் போது
துவண்டு... விடாதே தமிழா.
தோல்விக்குப் பின்னே வெற்றி
அதை மறந்து விடாதே தமிழா.
இலட்சியப் பாதை நோக்கி
அடி... எடுத்து வை தமிழா.
இலங்கையில் பாதி தமிழீழம்
அதை மறந்து விடாதே தமிழா.

மானத்தமிழா..... நீ... மறத்தமிழா...
மானம் காக்க..... நீ... புறப்படடா...(2)

(((ஆணும் பெண்ணும் வேறல்ல
சமத்துவம் படைக்க முன் வருவோம்.
ஆயுதம் ஏந்தும் எம்கரங்கள்
அழிக்கத்துடிக்குது எதிரியின் பாசறையை.)))

காதலும்..... காமமும்.....!

வானத்து நிலவில்.....
வரைந்த ஓவியமே....!
என் காதல் கதையைக்
கேட்டுப்பார்.....

முற்றத்து நிலவில்....
முல்லைப்பந்தல் நடுவில்
முதல் முறை என் கன்னத்தில்
முத்தமிட்ட சுவாசக் காற்றே - என்
முழு இதையத்தையும்
முகாம் ஆக்கி விட்டாய்.

நிலவின் ஒளியில்.....
நீண்ட நதியின் நடுவில்
முதல் முறை என் விழியில்
வித்திட்ட காதல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
சேமித்து விட்டாய்;.

மலையின் உச்சியில்.....
மாலை வேளையில்

இப்படித்தான் இன்று வன்னிக் காதல்

கண்ணா..... வருவாயா.......?
காதல் முத்தம் தருவாயா.....?
உன்னைப் பார்த்த மயக்கம்.
இன்னும் போகவில்லை.
விழியில் தவழும் கண்ணீர்.
விரைவில் ஆறாய் மாறும்.
புவியில் வாழ்ந்த காலம்.
பூவாய் மாறிப் போகும்.

புயலே........... புயலே...........!
ஏன் இந்தக் கோபம்.
கடலே........... கடலே...........!
ஏன் இந்தத் தாகம்.
என் காதல் உடைந்து
கல்லறை வாசல் செல்கிறது. - உன்
பாதம் பட்ட இடமெல்லாம்

காதல் வந்ததே...!

காதல் வந்தது...
உன்னைக் கண்டதும்.
கண்கள் கண்டது....
உந்தன் புன்னகை.

உலகம் உருண்டது....
உன்னைத் தேட.
என்னுருவம் குலைந்தது.....
உன்வாசம் அடைய.

இமைகள் மூடுதே...
புயற் காற்றில்.
புருவம் உயருதே...
உனைப் பார்த்து.

விழிகள் பேசுதே...
உனை நோக்கி.
வார்த்தை மயங்குதே...
உன்நடை கண்டு.

உன் பாதம் பட்ட...
பூமி இது
வைரக் கல்லாய்...
மாறும் நேரமிது.

உன் பாசம் பட்ட...

சிவந்தனின் வெற்றிநடை....

நீதிக்காய்...
முகம் கொடுத்தோம்.
முள்வேலிக் கம்பிக்குள்...
முடக்கப்பட்டோம்.

தாய் மண்ணிற்காய்....
தோல் கொடுத்தோம்.
தடுப்பு வதைமுகாமுக்குள்....
தள்ளப்பட்டோம்.

வேதனை என்ற...
போர்வையில்.
வெந்து போனது...
எம் உள்ளங்கள்.

சாதனை என்ற...
பார்வையில்.
புதைந்து போனது...
அரசின் உண்மைகள்.

தாயக விடுதலைக்காய்....
தமிழ் மானம் காக்க...
கால் நடையாய்ப்...
புறப்பட்ட வீரன் சிவந்தா....!

சுவாச தேவதையே.....! (சிகரட்)

என் சுவாச தேவதையே...!
உன்னை என் விரல்களால்
அணைக்கும் போது...
எனக்குள் ஓர் உணர்வு
என்னை அறியாமலே...
அலை பாய்கின்றது.

விழிகளை மூடி
உன்னிதழோடு என்னிதழ்
முத்தமிடும் போது...
உன் சுவாசக் காற்று
என்னிதயத்தை ஒரு
நொடியில் அணைக்கின்றது.

என் காதல் தேவதையே...!
உன்னைக் கைவிட்டால்
என் ஐம்புலன்களும்....
என்னை மறந்து விடும்.
அணு அணுவாய்த் தம்
உயிரைப் போக்கிவிடும்.

என் இதயத்தைக் - குடி

எழுதுகோல் தீக்குச்சி ஆனதடா...!

முகம் அறியா....
முத்துக்குமாரா - உன்
முகவரி இன்று
முழுமையாய் பதிந்தது
உலகத்தமிழர் நெஞ்சிலடா...!

எழுதுகோல் என்னும்
தீச்சுடரால்....
ஏற்றி வைத்தாய்
பல தீபமடா...!

ஏழ்மையில் வாழ்ந்தாலும்
நேர்மை என்னும்
நேர்... வழியில்...
போனது உன் உள்ளமடா...!

ஈழத்தமிழர்
வேதனையை...
ஏற்க மறுத்தது
இந்திய தேசமடா...!

அந்தச் சோகக்கதையை
சொந்தக்கதையாய்
எழுதிவிட்ட எழுதுகோல்
தீக்குச்சி ஆனதடா...!

வீரனுக்கு அழகு இதுவல்ல.

தாயிற்கு ஒரு பிள்ளை ஆனாய் - ஏன்
ஆமியில் போய்ச் சேர்ந்தாய்.
நாட்டைக் காப்பது...
வீரனுக்கு அழகு.

ஆனால் எம் தேசத்தை அழிப்பது
உனக்கு அழகல்ல புகழல்ல...
ஈழத்தை அழிக்க முயன்றால்...
அழிவது நாமல்ல நீயல்லோ...

வீரத்தைக்.....
காட்டவில்லை போரில்.
வீழ்ந்த ஆமியைத்.....
தூக்கவில்லை உன் கரத்தில்.

எட்டப்பன்.....
கூட்டத்தின் கூற்றில்.
எடுத்து வைத்த பாதம்...
சரிந்தது இன்று ஏட்டில்.

அப்பாவி மக்களைச்.....

சிறைக்கம்பிகள் பேசினால்.....!

சிகரத்தை எட்டிப் பார்க்கும்
உனக்கு...
சிறைக் கம்பிகள் எண்ணுவது
ஏனடா...!

சிங்களக் காடையர்
வீசிய வலையில்
சிக்கிய தமிழ்த் தோழா....
உன்னைப் பார்த்ததும்
வடிகின்றது கண்ணீர்.

என்னைப் பற்றுவதால்....
உனக்குப் பெருமையல்ல.
உன்னை எனக்குள் அனைப்பதால்....
அளவில்லா ஆனந்தம்.

காரணம் மொழிகின்றேன் கேளடா தமிழா...
நீ.... கஞ்சா கடத்தவில்லை.
கொலை கற்பழிப்பு செய்யவில்லை.
ஆள்க் கடத்தல் கடத்தவில்லை.

வீர மகனைப் பெற்றெடுத்த.... வீரத் தந்தையே...!

வீர மகனைப் பெற்றெடுத்த....
வீரத் தந்தையே...!
வேத வாக்காய் வன்னி மண்ணில்
வாழ்ந்த தெய்வமே....!

உன் மகனின் பெயரைக் கேட்டாலே....
பயந்து ஒடுங்கும் எதிரிப் படைகள்.
உன் வயதை மதியாது....
சிறைக்குள் சிந்தனை சிதறாமல்.
சித்திரவதையாலேயே கொன்றுவிட்டு....
உலகிற்கு இயற்கை மரணம் எய்தாரென.
வதந்திகளை பரவவிடுவது...
இலங்கை அரசிற்குக் கைவந்த கலையல்லவா...?

உன் பேரன் எங்கள் நேசக்குமரன்
எம்மை விட்டுப்போன துயரம்

User login

Who's online

There are currently 1 user and 21 guests online.

Online users

Syndicate

Syndicate content